கொடிவேரி அணைக்கட்டிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் – விவசாயிகள் மகிழ்ச்சி

கொடிவேரி அணைக்கட்டிலிருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்காலில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் அணை மூலம் பாசன வசதி பெறக்கூடிய கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பகுதியில் முதல் போக சாகுபடிக்காக கடந்த ஜூலை மாதம் அணை திறக்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டாம் போக சாகுபடிக்கு அணையை திறக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் மனு அளித்திருந்தனர். தமிழக அரசின் ஆணைக்கிணங்க கொடிவேரி அணைகட்டில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

தண்ணீர் திறப்பால் இருபத்து நான்கு ஆயிரத்து ஐந்நூற்றி நான்கு ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். அனை திறக்கப்பட்டதையடுத்து தமிழக அரசிற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்

Exit mobile version