தக்காளி விலை அதிகரிக்கும் நிலை உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

வியாபார சந்தைகளில் தக்காளி விலை மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் வியாபார சந்தையில், தக்காளிக்கென்ற பிரத்யேகமாக மார்கெட் உள்ளது. இங்கு தமிழகத்தில் உள்ள பெரு நகரங்களில் இருந்து தக்காளிகள் வாங்கி செல்ல வியாபாரிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில வருடங்களாக மழை இல்லாத நிலையிலும் விவசாயிகள் தக்காளியை பயிரிட்டு விலையில்லாததால் கவலையடைந்தனர். கடுமையான வெயிலின் காரணமாக சில மாதங்களாக ஒரு கிரேடு விலை 750 க்கு விலைபோனது. இதனால் விலை இன்னும் அதிகமாகும் நிலை உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Exit mobile version