முட்டைகோஸ் விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் பயிரிடப்படுள்ள முட்டைக்கோசுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் முட்டைக்கோஸ் பயிரானது சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தி பயிரிடப்பட்டுள்ளது. தற்பொழுது முட்டைகோஸ் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. கோடை காலம் என்பதால் விளைச்சல் சற்று குறைவாகவே உள்ளது. ஆனால் முட்டைக்கோஸ் கிலோ ஒன்றுக்கு 12 முதல் 15 ரூபாய் வரை விலை போவதால் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version