அரளிப்பூ விலை அதிகமானதால் விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் அரளிப்பூவின் விளைச்சல் மற்றும் விலையும் அதிகமாக கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதிகளில் அரளிப்பூ அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் அரளிப்பூ அதிகமாக பூத்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒரு கிலோ அரளிப்பூ 250 முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளதால் அரளிப்பூவின் விளைச்சல் மேலும் அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version