மலைசீதாப்பழ விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் மருத்துவ குணம் வாய்ந்த மலைசீதா பழம் விளைச்சல்  அமோகமாக உள்ளதாலும், பழங்களுக்கு நல்ல விலை கிடைப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்களில் மருத்துவ குணம் கொண்ட மலை சீதாப்பழம் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. கொடைக்கானல் பகுதிகளில் விளையும் முள் சீதா பழத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் ஒரு கிலோ 80 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை விற்படுகின்றன. இந்த ஆண்டு சீதா பழம் விளைச்சல் அமோகமாக இருப்பதுடன், நல்ல லாபமும் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version