பூக்கள் விலை குறைவால் விவசாயிகள் கவலை

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை குறைந்துள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

இங்குள்ள பூ மார்க்கெட்டிற்கு நிலக்கோட்டை, வெள்ளோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. வியாபாரிகள் மூலம் கேரளா மற்றும் பிற மாநிலங்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த சில நாட்களாக கோவில் திருவிழாக்கள் மற்றும் தொடர் முகூர்த்த தினங்கள் இருந்ததால் பூக்கள் விலை கணிசமாக அதிகரித்து இருந்தது. மல்லிகைப்பூ 500 ரூபாயிலிருந்து 700 ரூபாய் வரை விற்பனையானது. இந்நிலையில் முகூர்த்த தினங்கள் முடிவடைந்துள்ளதால் பூக்களின் விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

Exit mobile version