News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

கஜா புயலில் மனம் தளராத விவசாயி செங்குட்டுவன்

Web Team by Web Team
July 29, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம், வீடியோ
Reading Time: 1 min read
0
கஜா புயலில் மனம் தளராத விவசாயி செங்குட்டுவன்
Share on FacebookShare on Twitter

கஜா புயலின் பாதிப்பில் மனம் தளராத விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான இடத்தில் ஒருங்கிணைந்த பண்ணை விவசாய திட்டத்தை துவங்கி பல்வேறுபட்ட சாகுபடிகளை செய்து அசத்தி வருகிறார். அது பற்றிய செய்தி தொகுப்பை தற்போது காணலாம்…

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் ஆயிரக்கணக்கான வீடுகளும் லட்சக்கணக்கான மா, தென்னை, சவுக்கு, முந்திரி உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் சேதமடைந்தன. கஜா புயலின் பாதிப்பினால் மனம் தளராத விவசாயி ஒருவர், தனக்கு சொந்தமான இடத்தில் ஒருங்கிணைந்த பண்ணை விவசாய திட்டத்தை துவங்கினார்.

நிலத்தில் ஒரு குளத்தை வெட்டி அதில் இருந்து அரசின் 100 சதவீத மானியத்தில் பாசன கருவிகளை பெற்று சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் என தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார் செங்குட்டுவன்.

வீட்டை சுற்றியுள்ள ஒருங்கிணைந்த பண்ணை தோட்டத்தில் வேளாண்மை துறையின் மூலம் முழு மானியத்தில் பெறப்பட்ட சொட்டு நீர் பாசனத்தால் மா, தென்னை, வாழை, புடலை, நில கடலை, கொய்யா ,மல்லிகை, முருங்கை, பரங்கி, என 15க்கும் மேற்பட்ட பயிர்களை சாகுபடி செய்கிறார்.

மேலும் சாகுபடிக்காக வெட்டிய குளத்தில் பல்வேறு வகையான மீன்களை வளர்த்து வருகின்றார். சாகுபடிக்கு ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் ஆடு, மாடுகளின் சாணங்களையும், மரங்களின் தழைகளையும் இயற்கை உரங்களாக பயன்படுத்தி வருகிறார்.

பருவத்துக்கேற்ப பலவகை பயிர்களை கொண்டு சாகுபடிகளை மாறி மாறி செய்வதினால், மண் வளம் காக்கப்படுவதோடு நிறைந்த லாபம் கிடைப்பதாக கூறுகிறார் செங்குட்டுவன்.

வேளாண் துறை மூலம் வழங்கபட்ட மானியத்தால் விவசாயிகள் பல்வேறு தரபட்ட பயிர் மற்றும் விவசாயம் செய்து பயனடைந்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

தன்னிடம் எதுவும் இல்லையே என நினைத்து கவலையில் ஆழ்ந்து விடாமல், இருப்பதை வைத்து சாதித்து காட்டுவதே புத்திசாலித்தனம்…

Tags: கஜா புயல்விவசாயிவிவசாயி செங்குட்டுவன்
Previous Post

புறா இனத்தை பாதுகாத்து வளர்க்கும் பட்டதாரி இளைஞர்

Next Post

குவாத்தமாலா ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் போராட்டம்

Related Posts

கஜா புயல்: ஓராண்டிற்குள் இயல்பு நிலைக்கு திரும்பிய டெல்டா மாவட்டங்கள்
TopNews

கஜா புயல்: ஓராண்டிற்குள் இயல்பு நிலைக்கு திரும்பிய டெல்டா மாவட்டங்கள்

November 16, 2019
இயற்கை முறையில் கீரைகளை பயிரிட்டு அசத்தி வரும் விவசாயி
செய்திகள்

இயற்கை முறையில் கீரைகளை பயிரிட்டு அசத்தி வரும் விவசாயி

August 4, 2019
இருமுனை விவசாயத்தால் நல்ல லாபம் ஈட்டும் விவசாயி
செய்திகள்

இருமுனை விவசாயத்தால் நல்ல லாபம் ஈட்டும் விவசாயி

July 16, 2019
கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் புதைவட கம்பிகள் பொருத்த நடவடிக்கை
TopNews

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் புதைவட கம்பிகள் பொருத்த நடவடிக்கை

July 5, 2019
கஜா புயலால் வீடு இழந்தவர்களுக்கு புதிய வீடு கட்டப்பட்டு வருகிறது
TopNews

கஜா புயலால் வீடு இழந்தவர்களுக்கு புதிய வீடு கட்டப்பட்டு வருகிறது

July 3, 2019
வீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைத்து தண்ணீர் வழங்கும் விவசாயி
செய்திகள்

வீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைத்து தண்ணீர் வழங்கும் விவசாயி

June 25, 2019
Next Post
குவாத்தமாலா ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் போராட்டம்

குவாத்தமாலா ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் போராட்டம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version