நிலத்தகராறில் விவசாயி கொலை: தலைமறைவாக இருந்தவர் கைது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நிலத்தகராறில் விவசாயி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

செஞ்சியை அடுத்த குறிஞ்சிப்பை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஜானகிராமன், சரவணன் ஆகியோர் இடையே, நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 16ம் தேதி இரவு ஜானகிராமன், கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதல்கட்ட விசாரணையில் நிலத்தகராறு காரணமாக கொலை நடந்ததும், இதில் சரவணனுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த சரவணனை, தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Exit mobile version