ஃபானி புயல் எச்சரிக்கை : மீன்பிடி படகுகள் கடற்பகுதிகளில் நிறுத்தம்

ஃபானி புயல் குறித்த வானிலை மைய எச்சரிக்கையை அடுத்து, குமரி மாவட்டத்தில் நாட்டு படகுகள், கடற்கரைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா படகுகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல் எச்சரிக்கையை அடுத்து, நாட்டு படகுகள், ஃபைபர் படகுகள் உள்ளிட்டவை கரையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், குமரி முக்கடல் சங்கம பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கையை அடுத்து மாவட்ட நிர்வாகம் முழுமையான கவனத்துடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

Exit mobile version