உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல ரசிகர்கள் சிறப்பு வழிபாடு

உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டி 6 அடி உயர ஊதுபத்தி ஏற்றி ரசிகர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் கடந்த 30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அரையிறுதி போட்டிக்கு ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் செல்வது உறுதியாகியுள்ளது. இந்தநிலையில் அடுத்த இரண்டு இடங்களுக்கு நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகளுக்கிடையே போட்டி நிலவி வருகிறது. வரும் 14ஆம் தேதி உலக கோப்பை இறுதி போட்டி நடைபெறவுள்ளநிலையில், இந்திய அணி உலக கோப்பையை பெற வேண்டும் என்பது இந்திய ரசிகர்களின் கனவாக உள்ளது.

இந்தநிலையில், மதுரையில் உள்ள இன்மையில் நன்மை தருவார் கோயிலில் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் இணைந்து 6 அடி உயரம் கொண்ட ஊதுபத்தியை ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். இந்த 6 அடி ஊதுபத்தி முழுமையாக கையால் செய்யப்பட்டது. முழு தகுதி பெற்றுள்ள இந்திய அணி இம்முறை கோப்பையை வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version