எதிர்பாராத விபத்தில் பிரபல விளையாட்டு வீரர் மகளுடன் மரணம்

பிரபல கூடைப்பந்து வீரர் அவரின் மகளுடன் விபத்தில் மரணமடைந்துள்ள சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கூடைப்பந்து போட்டியில் உலக அளவில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டவர் நியூயார்கின் லாக்கர்ஸ் அணியின் முன்னாள் வீரர் கோப் பிரைன்ட்.இவர் சில காரணங்களால் 2016ம் ஆண்டு சர்வதேச கூடைப்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார்.ஓய்வுக்கு பிறகு பயிற்சியாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று கலிபோர்னியாவில் இருக்கும் ஒரு கல்லூரிக்கு பயிற்சியாளராக தனது 13 வயது மகளுடன் சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 9 பேரும் உயிரிழந்தனர்.இந்த அதிர்ச்சி செய்தியானது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.கோப் பிரைன்ட் மற்றும் அவரின் மகளின் மரணத்திற்கு விளையாட்டு வீரர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கோப் பிரைன்ட் என்ற வார்த்தையை பயன்படுத்தி ட்விட்டரில் பலரும் அவரின் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

Exit mobile version