குடிபோதையில் தகராறு செய்தவரை அடித்துக் கொன்ற குடும்பத்தினர்

காஞ்சிபுரம் மாவட்டம் ஐய்யம்பேட்டையில் மதுபோதையில் தகராறு செய்தவரை அடித்துக் கொன்ற தந்தை மற்றும் சகோதரர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

ஐய்யம்பேட்டை கந்தப்பர் தெருவில் மணி என்ற ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மனைவி மற்றும் 3 மகன்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் இவரது இரண்டாவது மகனான மகேஷ் குடித்து விட்டு குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் குடித்து விட்டு தகராறில் ஈடுபட்ட மகேஷை , அவருடைய தந்தை மற்றும் இரண்டு சகோதரர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்துறையினரிடம் இருந்து தப்புவதற்காக மகேஷ் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினர். எனினும் அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், மகேஷை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து மகேஷின் தந்தை, இரண்டு சகோதரர்கள் மற்றும் அவரது தாயாரை காவல்துறையினர் கைது செய்தனர்

Exit mobile version