போலி கால்சென்டர் நடத்தி ஏமாற்றியவர்கள் கைது

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் போலிகால் செண்டர் நடத்தி பொதுமக்களை ஏமாற்றி வந்த 20க்கும் மேற்பட்டோரை காவல்தூறையினர் கைது செய்தனர்

தான்பாத்தில் போலி கால் செண்டர் நடத்தி இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டவரை ஏமாற்றி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் போலி கால் செண்டர் நடத்தி வந்த 20க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version