அடேய் சாமியாரா நீ? சாமியாரா?? இதுக்கு முன்னாடி பார்ல வேலை பார்த்து இருப்பாரோ!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, குறி கேட்க வரும் நபர்களை முழு பாட்டில் மதுவை குடிக்க வைத்து, குறி சொல்லி அனுப்பும் சாமியாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே, நெமிலி கிராமத்தில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மணி என்பவர், கடந்த 10 வருடங்கள் முன்பு ஆலயம் அமைத்து, அங்கு குறி ஜோசியம் சொல்லி வருகிறார்.

செவ்வாய்கிழமை 300 ரூபாய்க்கும், புதன்கிழமை அன்று சிறப்பு காணிக்கையாக ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு குறி கூறி வருகிறார்.

இந்நிலையில், ஜோசியம் பார்க்க வந்த ஒருவரை, முழு பாட்டில் மதுவை ஒரே மூச்சில் குடிக்க வைத்து, குறி கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளும் சாமியார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version