News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home அரசியல்

பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் பொம்மை முதல்வர்! – எதிர்க்கட்சித் தலைவர் கடும் கண்டனம்!

Web team by Web team
July 28, 2023
in அரசியல், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் பொம்மை முதல்வர்! – எதிர்க்கட்சித் தலைவர் கடும் கண்டனம்!
Share on FacebookShare on Twitter

கனவு உலகில் இருக்கும் விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், உலக வரலாற்றில், ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜி கட்சியில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த கோயபல்ஸ், பொதுக்கூட்டங்களில் வாயைத் திறந்தாலே வண்டிவண்டியாகப் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடக் கூடியவர் என்றும், ஒரே பொய்யை திரும்பத்திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற தத்துவத்தைக் கண்டுபிடித்த அந்த கோயபல்ஸ்-ஐ, நம்மில் யாரும் பார்த்ததில்லை என்றும், அந்த கோயபல்ஸ்-ன் மொத்த உருவமாக, சந்தர்ப்ப வசத்தால் முதலமைச்சரான மு.க. ஸ்டாலினை தமிழக மக்கள் பார்க்கிறார்கள் என்று விமர்சித்துள்ளார். திருச்சியில் கடந்த 26ம் தேதி நடைபெற்ற தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில், கொத்தடிமைகளின் தலைவராக விளங்கும் மு.க. ஸ்டாலின், மனம் போன போக்கில் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டிருக்கிறார் என்றும், திமுக ஆட்சியின் தவறுகளை எந்தக் கொம்பனாலும் கண்டுபிடிக்க முடியாது என்று மார்தட்டுகிறார் என்றும், திமுக-வினர் தவறுகள் செய்வதில் கொம்பாதி கொம்பர்கள் என்றும், விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் சூராதி சூரர்கள் என்றும், இவர்களின் தவறுகளை சாதாரண மக்களும், கொம்பனும், சூரனும் எப்படி கண்டுபிடிக்க முடியும் என்றும் கூறி தமிழக மக்கள் சிரிக்கிறார்கள் என்றும் எதிர்க்கட்சி தலைவர் விமர்சித்துள்ளார். எங்களுக்குள் தவறுகள் இருக்கலாம், ஆட்சியில் தவறுகள் இல்லை என்றும், அதிமேதாவிபோல் ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலமும் அளித்திருக்கிறார் என்றும், தவறுகளின் மொத்த உருவமே ஆட்சி செய்யும்போது, அவரது கட்சியினர் சும்மாவா இருப்பார்கள்? தன் கட்சிக்காரர்களை அடக்க; கண்டிக்க வக்கில்லாத ஸ்டாலின், அதே கூட்டத்தில் நம்மீது பாய்ந்து பிராண்டி இருக்கிறார் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய அரசை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி ஏதாவது வாயை திறக்கிறாரா? வழக்குகளை காட்டி மிரட்டி பிரதமர் எடப்பாடியை பணிய வைத்துள்ளார் என்று போகிற போக்கில் சேற்றை வாரிப் பூசும் வேலையை ஸ்டாலின் செய்துள்ளார் என்றும், தி.மு.க. அமைச்சர்கள் உட்பட பலர் சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றத்தில் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளதாகவும், இலாக்கா இல்லாத மந்திரியாகவே ஒரு நபர் ஜெயிலில் இருக்கிறார் என்றும், அமலாக்கத்துறை வழக்குகள் மற்றும் ரெய்டுகள் பல திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது உள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கையில் கூறியுள்ளார். மேலும், இவர்கள் மாநிலத்தில் ஆளும் கட்சியாகவும், அதே சமயத்தில், மத்தியில் காங்கிரஸ் கூட்டணியிலும் பங்கு பெற்றிருந்த போதே, இவர்கள் மீது சிபிஐ வழக்குகள் இருந்ததை திமுக தலைவர் வசதியாக மறந்துவிட்டார் போலும் என்று சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சி தலைவர், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும், கழக நிர்வாகிகள் மீதும் விடியா திமுக அரசின் ஏவல் துறையால் புனையப்பட்ட, ஜோடிக்கப்பட்ட வழக்குகள்தான் உள்ளனவே தவிர, மத்திய அமலாக்கத் துறை வழக்குகள் ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். திருவிழா கூட்டத்தில் திருடிக்கொண்டு ஓடுபவன், திருடன் திருடன் என்று கத்திக்கொண்டே ஓடுவான்… அதுபோல் கடந்த 26ம் தேதி திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மேல் உள்ள, வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் பணப் பரிமாற்றம் பற்றி விசாரிக்கும் அமலாக்கத் துறையின் வழக்குகளை மறைக்க, எந்தவித அடிப்படை ஆதாரமுமின்றி அதிமுகவை பற்றி அவதூறாகக் கூறியிருப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அதிமுக மீது தொடர்ந்து அவதூறு பரப்பி, தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் விடியா அரசின் முதலமைச்சருக்கு, வரும் காலத்தில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும், விளம்பரத்தால் உயர்ந்தவன் வாழ்க்கை நிலைக்காது’ என்ற புரட்சித் தலைவர் வாக்கை, தற்போதைய நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நினைவூட்ட விரும்புகிறேன் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், மணிப்பூர் சம்பவம் குறித்து தான் ஏதும் பேசவில்லை என்று நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காடிட்யுள்ள எதிர்க்கட்சி தலைவர், மணிப்பூர் கலவரம் துவங்கிய உடனேயே, அதனைக் கண்டித்தும், கலவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அங்குள்ள தமிழர்களை பாதுகாப்பாகக் காப்பாற்ற வேண்டும் என்றும், அதிமுக சார்பில் கடந்த மே 5ம் தேதி அறிக்கை மூலம் விடியா திமுக அரசின் முதலமைச்சருடைய கவனத்தை ஈர்த்திருந்தேன் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். குறிப்பாக, மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பவம் குறித்து நான், எனது கடுமையான கண்டனத்தை கடந்த 21ம் தேதி அன்றே தெரிவித்திருந்தேன் என்றும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் வெளியிடும் அறிக்கைகள் மற்றும் ட்விட்டர் பதிவுகள் போன்றவற்றைக்கூட தன்கீழ் உள்ள காவல் துறை மூலம் தெரிந்துகொள்ள வக்கில்லாத முதலமைச்சர், மணிப்பூர் சம்பவத்தைப் பற்றி நான் பேசவில்லை என்று தனது நிதியமைச்சர் மூலம் கடந்த 22ம் தேதி பேட்டி அளிக்க வைத்ததும், பிறகு, கடந்த 26ம் தேதி பகிரங்கமாக திருச்சி பொதுக்கூட்டதில் பேசி இருப்பதும், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், தான் ஆட்சி செய்யும் மாநிலத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருப்பதை தமிழக மக்களிடையே வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது என்றும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அதிமுக சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும், குறிப்பாக பெண்கள் பாதுகாப்புடன் நடமாட வேண்டும் என்று காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளித்து சட்டத்தின் ஆட்சியை நடத்தியது என்றும், தமிழகத்தில் 2019ம் ஆண்டு எனது தலைமையிலான ஆட்சியில், 7 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடந்ததாகவும், ஆனால் விடியா திமுக ஆட்சியின் 2022ம் ஆண்டு கொள்கை விளக்க குறிப்பின்படி 58 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடந்துள்ளதாகவும், இதில் இருந்தே தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பெண்களின் பாதுகாப்பு எந்த அளவுக்கு சீர்கேடு அடைந்துள்ளது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். எனவே, இனியாவது சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு பாதுகாப்பற்றத் தன்மை, போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறுதல் போன்றவற்றிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தும், கடும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தியும், வாக்களித்த தமிழக மக்கள் சிரமமின்றி வாழ்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, விடியா திமுக அரசுக்கு வலியுறுத்தி உள்ளார்.

Tags: Against MKStalinAIADMKclown CMcondemnedappadi k palanisamyfeaturedmkstalin
Previous Post

ஜாமீன் மட்டும் இல்லையாம்ணே! கடல்லயே இல்லையாம்! கரூர் உ.பிக்களுக்கு ஜாமீன் Cancel!

Next Post

“வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலார் பிறந்த ஊரிலேயே இப்படி நடக்கலாமா?

Related Posts

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!
அரசியல்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!
அரசியல்

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!
அரசியல்

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!
அரசியல்

கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!

September 27, 2023
Next Post
“வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலார் பிறந்த ஊரிலேயே இப்படி நடக்கலாமா?

“வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலார் பிறந்த ஊரிலேயே இப்படி நடக்கலாமா?

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version