ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் விவகாரத்தில் காங்கிரஸில் கோஷ்டி மோதல்

ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல், கைகலப்பில் முடிந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் காந்தி சிலை அருகே உள்ள சிலைக்கு மாலை அணிவிக்க, காங்கிரஸ் கட்சியினர் இரண்டு குழுக்களாக வந்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஒரே நேரத்தில் இரு தரப்பினரும் மாலை அணிவிக்க முற்பட்டதால், யார் முதலில் மாலை அணிவிப்பது என்பது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒரு தரப்பினர் வைத்திருந்த விளம்பர பலகையை, மற்றொரு தரப்பினர் அகற்றியதால் கைகலப்பு ஏற்பட்டது. நகரின் மையப் பகுதியில் நடைபெற்ற இந்த மோதலால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Exit mobile version