மருத்துவக் கல்லூரியில் இளம் பெண்ணுக்கு முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் முதன் முறையாக இளம் பெண்ணுக்கு  முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம்  புதுப்பட்டியைச் சேர்ந்த சண்முகப்பிரியா என்ற பெண்ணின் பற்கள் முன்புறம் தள்ளி இருந்த காரணத்தினால் உணவை மென்று தின்பதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் குழு அந்தப் பெண்ணைப் பரிசோதித்ததில், அவருக்குப் பற்கள் மட்டுமல்லாது மேல் தாடையும் முன்தள்ளி இருப்பதைக் கண்டறிந்தனர். இதனையடுத்து, அவருக்கு மறுநாளே முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற அறுவைச் சிகிச்சையில், அந்தப் பெண்ணின் தாடையில் இருந்த எலும்புகள் வெட்டி எடுக்கப்பட்டு வெற்றிகரமாக முகம் சீரமைக்கப்பட்டது. புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் முதல் முறையாக முகச்சீரமைப்பு அறுவை சிசிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த  மருத்துவர்களை அனைத்து தரப்பினர்களும் பாராட்டி வருகின்றனர்.

Exit mobile version