தமிழகத்தில் கொரோனாவுக்கான முககவசம் தயாரிக்கும் பணி தீவிரம்!

கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் முகக்கவசம் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் அதிகரித்து வருவதால், பெரும்பாலான மக்கள் முகக்கவசத்தை அணிந்தபடி வெளியே செல்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதனால், முகக்கவசங்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள தனியார் ஆலையில் முகக்கவசம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆலையில் பணியாற்றும் பெண்கள் இரவு பகலாக முகக்கவசம் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முழு வீச்சில் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இங்கு தயாரிக்கப்படும் முகக்கவசங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் ஆலை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version