மாஸ்க் இல்லைன்னா பெட்ரோல் கிடையாது!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெட்ரோல் பங்குகளில், முகக் கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படுகிறது.

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், முகக் கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் நிரப்பப்படும் என தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் நேற்று அறிவித்தது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பெட்ரோல் நிலையங்களில், இன்று முதலே முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் நிரப்பப்படுகிறது.

முகக்கவசம் அணிந்த பின்பே பெட்ரோல் நிலையங்களுக்குள் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நாளை முதல் இந்த நடவடிக்கையை தீவிரப்படுத்தவும் தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

Exit mobile version