எழிலகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தீ – ஏ.சியில் ஏற்பட்ட மின்கசிவே விபத்துக்கு காரணம்

சென்னையில் உள்ள அரசு அலுவலக கட்டடமான எழிலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.  சென்னை காமராஜர் சாலையில் உள்ள அரசு அலவக கட்டடமான எழிலகத்தில் நில நிர்வாகம், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரகம், மாநில திட்ட ஆணையம் போன்ற பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அங்குள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். குளிர்சாதன இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி, அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அலுவர்கள் பெரும்பாலும் பணியில் இல்லை. இதனால் பெரியளவிலான பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

 

Exit mobile version