கல் வீச்சில் ஈடுபட இளைஞர்களுக்கு ரூ.500 சம்பளம் கொடுக்கும் தீவிரவாத குழுக்கள்

உச்சக்கட்ட பதற்றத்தில் உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசும் இளைஞர்களும் தீவிரவாதிகளாகவே கணக்கில் கொள்ளப்படுவார்கள் என்று ராணுவம் அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் மாநிலத்தில் கல் வீச்சில் ஈடுபடும் இளைஞர்களுக்கு தீவிரவாத குழுக்கள் 500 ரூபாய் சம்பளம் தருவதாக திடுக்கிடும் தகவல் அண்மையில் வெளியானது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ லெஃப்டினண்ட் ஜெனரல் தில்லான், கல்வீச்சில் ஈடுபடும் இளைஞர்களில் 83 சதவீதம் பேர் தீவிரவாத பாதையை தேர்ந்தெடுப்பதாகவும், எனவே தங்கள் வீட்டுப் பிள்ளைகள் ராணுவத்தில் துப்பாக்கிகளுக்கு பலியாகாமல் தடுக்கும் பொறுப்பு காஷ்மீர் தாய்மார்களுக்கே இருப்பதாகவும் அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version