இடைத்தேர்தலுக்கு பிறகு வாக்கு இயந்திரம் உள்ள இடங்களில் தீவிர பாதுகாப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைத்தேர்தல் முடிவடைந்தநிலையில், வாக்கு எண்ணிக்கைக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அமைதியாக நேற்று நடைபெற்று முடிந்தநிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் 84.36 சதவீத வாக்குகளும், நாங்குநேரியில் 66.35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version