தமிழகத்துக்கு தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதால் தீவிர பாதுகாப்பு

இலங்கையில் இருந்து தமிழகத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வெளியான தகவலையடுத்து, பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய சோதனைச்சாவடிகளில் வாகனங்கள் தீவிரச் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பயணிகள் தீவிரச் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ஒரு தகவல் கிடைத்ததுள்ளது என்றும், சென்னையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாநகரக் காவல் ஆணையர் விசுவநாதன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version