கடைக்கோடி கிராமங்கள் தோறும் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை

குடிமராமத்து பணிகள் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள கடைக்கோடி கிராமங்கள் தோறும் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து தீவட்டிப்பட்டி பகுதியில் முதலமைச்சர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

இந்தியாவிலேயே அதிக விருதுகளை பெற்ற ஒரே அரசு தமிழக அரசு தான் என்று கூறிய முதலமைச்சர், சேலம் தொகுதியில் அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Exit mobile version