கள்ளக்காதலில் ஒரு கவரி மான் ; ஊருக்கு பயந்து தற்கொலை

மதுரையில் திருமணமான பெண்ணுடன், தான் நடத்தி வந்த திரைமறைவு வாழ்க்கை, அப்பெண்ணின் கணவருக்கு தெரிய வர அவமானம் தாளாமல் தூக்கிட்டு உயிர் விட்டுள்ளது ஆண் கவரி மான் ஒன்று. அந்த உல்லாச பறவை யார்…? பார்க்கலாம்.

 

திருப்பூரை சேர்ந்தவர் செல்வகுமார், 30 வயதாகும் இவர், 41 வயதாகும் சுப்புலட்சுமி என்ற பெண்ணுடன் காதல் பாடம் பழகி வந்துள்ளார். குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக வெளியூரில் கணவன் மாடாய் உழைக்க, மதுரையில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்த உல்லாச பறவையோ, செல்வகுமாருடன் சேர்ந்து சிறகடித்து திரிந்துள்ளது.

ஹோட்டலில் வேலை செய்து தன் கணவன் அனுப்பும் பணத்தில், ஹோட்டல் ஹோட்டலாக சுற்றித் திரிந்த இந்த காதல் கிளிகள், ஊரடங்கு காரணமாக விடுதிகள் அடைக்கப்பட்டதால் உறைவிடம் இன்றி தவித்துள்ளன. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, தனது தாயை வெளியே அனுப்பி வைத்து விட்டு, வீட்டிலேயே கச்சேரி நடத்த தொடங்கினர்.

விடிந்தும் விடியாத ஒரு காலைப் பொழுதில் கதவு தட்டும் சப்தம் கேட்டுள்ளது. தனது அமுல் பேபியின் தூக்கத்தை கலைக்க மனமில்லாமல் அப்படியே எழுந்து வந்து கதவை திறந்துள்ளார் சுப்புலட்சுமி. பால் காரராகவோ, பேப்பர் காரராகவோ இருக்கும் என்று எண்ணி கதவை திறந்த அவருக்கு அப்போது கூட கணவன் என்று ஒரு ஜீவன் இருப்பது நினைவுக்கு வரவில்லை.

மனைவிக்கு இன்ப அதிர்ச்சி தருவதற்காக திடீரென வந்திறங்கிய கணவர், மனைவி கொடுத்த பெரும் அதிர்ச்சியில் உறைந்து போனார். மனைவியையும் அவரது அமுல் பேபியையும் காவல் நிலையத்தில் ஒப்படைக்க போவதாக கூறி ஊரை கூட்ட ஆயத்தமானார் அந்த புண்பட்ட கணவர். இதனால் அச்சம் அடைந்த இளைஞர், வீட்டில் இருந்த இன்னொரு அறைக்குள் சென்று தாழிட்டு கொண்ட நிலையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளைஞரின் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கவரிமான் இனமே கண் கலங்கும் அளவிற்கு அவமானம் ஏற்பட்ட அடுத்த கணமே உயிர் துறந்த செல்வகுமாரின் முடிவு சுப்புலட்சுமிக்கு மட்டுமல்ல… சுற்றாத்திற்கும் பேரதிர்ச்சிதான்.

Exit mobile version