வருமான வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!!

2019-20 ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய நவம்பர் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில் ஜூன் 30 ஆம் தேதி வரையும், அதன் பின்னர் ஜூலை 31 ஆம் தேதி வரையும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், 2019-20 ஆண்டிற்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்து வருமான வரித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Exit mobile version