உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் சிறப்பு அதிகாரிகளின் பதவிகாலம் நீட்டிப்பு

உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் சிறப்பு அதிகாரிகளுக்கு கால நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு திமுக தொடுத்த வழக்கின் காரணமாக உள்ளாட்சி தேர்தல் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, உள்ளாட்சி பணிகளில் சுணக்கம் ஏற்படாமல் இருக்க உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க  சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்தது. அதன்படி கடந்த ஜூன் 30ம் தேதி நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகளுக்காக பணிகாலம் டிசம்பர் 30-ம் தேதியுடன் நிறைவடந்ததையொட்டி மேலும் 6 மாதம் சிறப்பு அதிகாரிகளுக்கு கால நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

Exit mobile version