மக்களவை, சட்டப் பேரவைகளில் எஸ்.சி., எஸ்.டி இடஒதுக்கீடு நீட்டிப்பு

மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் எஸ்.சி., எஸ்.டி ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவுக்கு 352 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. புதிய அரசியல் தலைவர்கள் உருவெடுக்க இந்த இடஒதுக்கீடு நீட்டிப்பு அவசியம் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். முன்னதாக, மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 2030, ஜனவரி 25-ஆம் தேதி வரை நீட்டிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில், அண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version