காகிதங்களை கிழித்து சபாநாயகர் மீது வீசிய காங்கிரஸ் எம்.பிக்கள்!

மக்களவையில் வரம்பு மீறி நடந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேரை இடைநீக்கம் செய்து சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாகவும், அதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசினார். அப்போது டெல்லி கலவரம் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் எம்பிக்கள் காகிதங்களை கிழித்து சபாநாயகர் மீது வீசினர். அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வரம்பு மீறி செயல்பட்ட காங்கிரஸ் எம்பிக்கள் 7 பேரை  இடைநீக்கம் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.

தமிழகத்தை சேர்ந்த மாணிக்கம் தாகூர், கவுரவ் கோகாய், டிஎன் பிரதாபன், டீன் குரியகோஸ் உட்பட 7 காங்கிரஸ் எம்பிக்களும் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version