ஊரடங்கை நீட்டிப்பதா, விலக்குவதா? முதலமைச்சர் நாளை, நாளை மறுநாள் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு, வரும் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதைத் தொடர்ந்து, நாளை மறுநாள் மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசிக்கிறார். இதில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும், ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது விலக்குவதா என்பது குறித்தும் முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version