ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து விளக்கம்

சேலம் மாவட்டம் ஓமலூரில் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் தேர்தலில் ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திரத்தின் செயல்பாடு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு மற்றும் ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து நாட்டு மக்களுக்கு தேர்தல் ஆணையம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.கிராமங்கள்தோறும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் அனைத்து கட்சிப் பிரமுகர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேர்தல் இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட தேர்தல் அலுவலர்கள், அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் பிரமுகர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

Exit mobile version