சிறுத்தொழில் முனைவோருக்கான கண்காட்சி மற்றும் பயிற்சிப்பட்டறை

இலங்கை யாழ்ப்பாணத்தில் சிறு தொழில் முனைவோருக்கான கண்காட்சி மற்றும் பயிற்சிப்பட்டறை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

யாழ்ப்பாணத்தில் உள்ள வீரசிங்கம் மண்டபத்தில் இந்திய துணை தூதரகம் மற்றும் வடமாகாண கைத்தொழில் திணைக்களத்தின் சார்பில், சிறுதொழில் முனைவோருக்கான கண்காட்சி, பயிற்சிப்பட்டறை நடைபெற்று வருகிறது. 2 நாட்களாக நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில், தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் இருந்து சென்ற சிறப்பு பயிற்சியாளர்களால், சிறு கைத்தொழில் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும், சுய தொழில் முயற்சிகளில் ஈடுபட ஆர்வமுள்ளவர்களுக்கு இயந்திரங்களை சிறப்பு ஏற்பாடுகளுடன் வழங்குவதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

Exit mobile version