இனி இந்தியாவில் மின்சார வாகனம் தான்… பெர்மிட் பெறுவதில் விலக்கு…

மின்சார வாகனங்களுக்கு பெர்மிட் பெறுவதில் விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் முயற்சியாக தனியார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

16 முதல் 18 வயதுடையவர்கள் இ.ஸ்கூட்டர், கியர்லெஸ் பைக் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்க தேவையான கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறினார்.

Exit mobile version