கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க பிரத்யேக இணையதளம்…

சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும், வார்டு வாரியாக மக்களின் உடல்நிலை குறித்த தகவல்கள் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன. நோய்ப்தொற்றின் தாக்கம் தீவிரமடைந்ததையடுத்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் உடல் நிலை குறித்த தகவல்களை மட்டுமே பெறமுடிந்தது. இதன்காரணமாக, சென்னையில் உள்ள அனைவரது உடல்நிலை குறித்த தகவல்களை தெரிந்துகொள்வதற்காக, பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், சென்னை மக்கள் தங்கள் உடல்நிலை குறித்த தகவல்களை சுயபதிவு செய்யுமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் தங்களின் பெயர், வயது, பாலினம், முகவரி, கர்ப்பிணிகள், சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம், நாள்பட்ட நோய்கள் உள்ளிட்டவைகள் குறித்த  தகவல்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version