மசூதியில் நிர்மலாதேவி தியானம் செய்ய முற்பட்டதால் பரபரப்பு

அருப்புக்கோட்டை பள்ளிவாசலில் அனுமதியின்றி தியானம் செய்த நிர்மலாதேவி அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்தநிலையில், மதுரையில் உள்ள பள்ளிவாசலில் அமர்ந்து தியானம் செய்ய நிர்மலாதேவி முயன்றார். தகவல் அறிந்து வந்த மகளிர் காவல் துறையினர், அவரை மசூதியில் இருந்து வெளியேற்றினர்.

Exit mobile version