பெண் குழந்தைகள் பாதுகாப்பில் தமிழக அரசுக்கு விருது

பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டதாக தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி விருதுகளை வழங்கினார். தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கும் விழா மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் டெல்லியில் நடைபெற்றது. மத்திய அரசின் திட்டமான பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற திட்டத்தை இந்திய அளவில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

மக்கள் மத்தியில் இந்த திட்டத்தை சிறப்பாக எடுத்து சென்றதில் முதலிடம் பெற்ற திருவண்ணாமலை மாவட்டத்திற்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகளை மத்திய அமைச்சர் மேனகா காந்தி வழங்க, தமிழக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை முதன்மை செயலாளர் மணிவாசன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

Exit mobile version