கொரோனா நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்; சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பரிசோதனை!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சட்டப்பேரவையில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பணியாளர்களுக்கு, சுகாதாரத்துறை குழுவினர் கொரோனா பரிசோதனை நடத்தினர். கொரோனா பெரும் அச்சுறுத்தலாக உள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து தடுப்பு நடவடிக்ககைளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒருபகுதியாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வருகை தந்த, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அரசு பணியாளர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா பரிசோதனைக்குப் பின்னரே சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சட்டபேரவைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Exit mobile version