நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் இணைந்து பணியாற்றி அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும்: எஸ்.பி.வேலுமணி

நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் இணைந்து பணியாற்றி அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் புறநகர் மற்றும் மாநகர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும் என்றார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பூத் கமிட்டி கழக தொண்டர்கள் சிறப்பாக செயல் பட வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

Exit mobile version