ரஃபேல் விவகாரத்தில் ராகுல் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் பொய் : அருண் ஜேட்லி

ரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி உண்மைக்கு மாறாக பேசி வருவதாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டியுள்ளார். மக்களவையில் ராகுல்காந்தியின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்து பேசிய அருண் ஜேட்லி, ரஃபேல் விவகாரம் தொடர்பாக, ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களை கூறிவருவதாகவும், ராகுலின் குற்றச்சாட்டுகளை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளதாகவும் கூறினார்.

ரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி பேசி வரும் ஒவ்வொரு வார்த்தையும் பொய்யானது என்றும் அவர் குற்றம்சாட்டினார். நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கில் பெயில் பெற்று, சோனியா குடும்பம் வெளியே உள்ளதாகவும் அருண் ஜேட்லி விமர்சித்தார். ரஃபேல் விவகாரத்தில் ராகுல்காந்தியின் குற்றச்சாட்டை பிரான்ஸ் அரசே மறுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Exit mobile version