அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார் எத்தியோப்பிய பிரதமர்

எத்தியோப்பியா பிரதமர் ஆபை அகமதுவுக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இலக்கியம், இயற்பியல், வேதியல், மருத்துவம், பொருளாதாரம், உலக அமைதி போன்ற துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு, உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, கிழக்கு ஆப்பிரிக்க நாடான எதியோப்பியாவின் பிரதமர் ஆபை அகமதுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அண்டை நாடான எரிட்ரியா உடனான பனிப்போரை முடிவிற்குக் கொண்டுவந்து நாட்டில் அமைதியை நிலைநாட்டியதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆபை அகமதுக்கு தங்கப் பதக்கமும், ரூ.6.5 கோடிக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

Exit mobile version