ஊராட்சிமன்ற தலைவர் கொலை: குற்றவாளிகளை விரைந்து பிடித்த காவல்துறையினர்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை ஒரு மணி நேரத்தில் மடக்கி பிடித்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அந்தியூர் அடுத்துள்ள சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சின்னதங்கம் என்கிற ராதாகிருஷ்ணனை சென்னையை சேர்ந்த கூலிப்படையினர் வெட்டிப்படுகொலை செய்தனர்.

தர்மபுரி என்ற இடத்தில் போலீசார் கூலிப்படையினர் சென்ற வாகனத்தை துரத்தி வருவதைக் கண்ட பொது மக்கள் வாகனத்தை வழிமறித்து உள்ளனர். இதனை எதிர்பாராத கொலையாளிகள் வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடினர். எனினும் கொலையாளிகளை போலீசாரும் பொதுமக்களும் துரத்தி சென்று பிடித்தனர்.

இதையடுத்து, கொலை நடந்து ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகளை மடக்கிப் பிடித்த கவந்தப்பாடி போலீசாருக்கு ஈரோடு மாவட்ட எஸ்பி சக்திகணேசன் ரொக்க பரிசு வழங்கி  பாராட்டினார்.

Exit mobile version