+2 தேர்ச்சியில் ஈரோடு மாவட்டம் மாநில அளவில் இரண்டாம் இடம்

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் 95.23 சதவிகிதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் இரண்டாமிடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளது. மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 24 ஆயிரத்து 316 மாணவ, மாணவியர்களில் 23 ஆயிரத்து 153 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மேலும் செல்போன்கள் மூலம் முடிவுகளை தெரிந்துகொள்வதுடன், பள்ளியில் வந்து முடிவுகளை தெரிந்து கொள்வதில்தான் ஆர்வம் உள்ளதாக மாணவிகள் தெரிவித்தனர்.

Exit mobile version