ரூ.1 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் குடிமராமத்து பணிகள் : ஈரோடு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ஈரோடு மாவட்டம் மேற்குக்கரை வாய்க்காலில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். அந்தியூர் அடுத்த மேட்டூர் மேற்குக்கரை வாய்க்கால் பகுதியான நெருஞ்சிப்பேட்டை, உமாரெட்டியூர், பூதப்பாடி மற்றும் பூனாட்சி ஆகிய நான்கு பகுதிகளிலும் முதலமைச்சரின் குடி மராமத்து திட்டத்தின் கீழ், 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முழுவீச்சில் நடைபெற்று வரும் இந்த பணிகளை, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் நேரில் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 17 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் என்பதால், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version