ஈரோடு இடைத்தேர்தலையொட்டி அதிமுகவிற்கு பெருகும் ஆதரவு!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம் மற்றும் அருந்ததியர் எழுச்சி பேரவை ஆகிய அமைப்பினர் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து தெரிவித்தனர்.YouTube video player

சேலம் மாவட்டம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில், அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கத்தின் நிறுவனத் தலைவர் சதா தலைமையிலான நிர்வாகிகள் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், அதற்கான கடிதத்தையும் வழங்கினர். இதேபோல், அருந்ததியர் எழுச்சி பேரவை நிறுவனர் பிரதீப் குமாரும் நேரில் சந்தித்து அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்தார்.

Exit mobile version