ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னம் ஒதுக்க உத்தரவிடக்கோரி அதிமுக தொடர்ந்த வழக்கு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு, அதிமுகவின் மனு தொடர்பாக 3 நாட்களில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் அசாதாரண சூழலாக மாறி இருப்பதால் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க காலதாமதம் செய்ய வேண்டாம் எனவும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். இந்த வழக்கில் எதிர்மனுதாரர்கள் 3 நாட்களில் பதில் அளிக்கவும், தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை பிப்ரவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.YouTube video player

Exit mobile version