தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லையோ? – எதிர்கட்சித் தலைவர் ட்வீட்!

கழக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தன்னுடைய சுட்டுரை[டிவிட்டர்] பக்கத்தில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு உள்ளதாக சுட்டியுள்ளார்.
கோவையில் வீடுபுகுந்து துப்பாக்கியால் சுட்டும்,அரிவாளால் வெட்டியும் படுகொலை,அதே கோவையில் நீதிமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் கண்முன்னே மேலும் ஒருவர் கொலை, திருவண்ணாமலையில் 4ஏடிஎம்களில் தொடர் கொள்ளை, சென்னையில் நகைக்கடையில் கொள்ளை,போன்ற சம்பவங்களை பார்க்கும்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லையோ என்ற கேள்வி எழுவதுடன்,நிர்வாகத்திறனற்ற இந்த ஆட்சியில்,பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுகிறார்கள் தமிழகத்தில் மேலே குறிப்பிடபட்டுள்ள சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதற்கு இதுவே சாட்சி என்று சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version