வ.உ.சி.யின் 151-வது பிறந்தநாளையொட்டி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்தம் படத்திற்கு மலர்தூவி மரியாதை!

edappadi k palanisamy

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ”தனது உயரிய தியாகத்தால் அனைவர் மனதிலும் சுதந்திர வேட்கையை ஏற்படுத்திய தியாகச் செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் தியாகத்தைப் போற்றி சென்னை பசுமை வழிச்சாலை செவ்வந்தி இல்லத்தில் அவர்தம் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version