கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளித்த மாணவி – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு

கஜா புயல் பாதிப்புக்கு 520 ரூபாய் நிவாரணம் வழங்கிய 5ஆம் வகுப்பு மாணவிக்கு மிதிவண்டி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்தார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். சேலம் மாவட்டம் கிச்சிபாளையத்தை சேர்ந்த 5ஆம் வகுப்பு மாணவி அக்ஷய ஸ்ரீ, புதிய மிதிவண்டி வாங்க, தான் சேர்த்து வைத்திருந்த 520 ரூபாயை, புயல் நிவாரண நிதிக்காக வழங்கினார். இதனையறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அந்த மாணவியை அழைத்து, பாராட்டு தெரிவித்ததோடு, புதிய மிதிவண்டியை வழங்கினார். இதனால் மகிழ்ச்சியடைந்த அந்த மாணவி, முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

 

Exit mobile version