மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமியும் மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமியும் மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை தொண்டாமுத்தூரில் உள்ள அரசு பள்ளி மாணவிகளுக்கு மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாணவிகளுக்கு மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகளை வழங்கினார். இதனைதொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் பழனிசாமி மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

Exit mobile version