தொழில் முனைவோருக்கு தொய்வின்றி வங்கிக்கடன் வழங்கப்படும்: எஸ்.பி.வேலுமணி உறுதி

தொழில் முனைவோருக்கு தொய்வின்றி வங்கிக்கடன் வழங்கப்படும் என்று, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதியளித்துள்ளார்

கோவை ஆர்.எ.ஸ்.புரம் பகுதியில் தொழில் முனைவோருக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, வங்கி கடன் பெற்று பொதுமக்கள் அதிகளவில் பயன் பெற்றுள்ளனர் என்றும், இதன்மூலம் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வங்கிக் கடன் வழங்கும் திட்டம் கோவை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். இதன் மூலம் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அவர் உறுதி அளித்தார்.

Exit mobile version